என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாத சம்பளம்"
- 169 பேருக்கு இன்னும் மாத சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் கூறினர்.
- பல மாதங்களாக கால தாமதமாக சம்பளம் வழங்க ப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசீயன் என பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த மருத்துவ மனைக்கு தினமும் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் இந்த மருத்துவமனையில் எப்போதும் உள்நோயாளி கள், வெளிநோயாளிகள் என கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்த மருத்துவ மனையில் பணியாற்றும் அரசு ஊழியர்களான செவிலியர்கள், லேப் டெக்னிசீயன் என 169 பேருக்கு இன்னும் மாத சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் கூறினர்.
இதே போல் தொடர்ந்து பல மாதங்களாக கால தாமதமாக சம்பளம் வழங்க ப்படுகிறது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக பிரச்சினை காரணமாக செவிலியர்கள், லேப் டெக்னிசீயன்களுக்கு சம்பளம் காலதாமதாக வழங்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு அரசு விதித்துள்ள உரிய தேதிக்குள் மாத சம்பளம் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்